இலங்கை கடற்பரப்பில் நுழையவிருந்த மீன்பிடி கப்பல்களை தடுத்து நிறுத்திய கடற்படை
இலங்கையின் கடற்படை இன்று இலங்கை கடற்பரப்பில் நுழையவிருந்த பதினொரு இந்திய மீன்பிடி கப்பல்களைத் தடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கெப்டன் இந்திக டி சில்வாவின் தகவல்படி குறித்த படகுகளின் மீனவர்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக ஆபத்தை விரும்பவில்லை, எனவே இந்திய மீனவர்களை விசாரணை செய்து அவர்களை திருப்பியனுப்பியதாக இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கடற்படை படகுகளில் 86பேர் இருந்தனர். இவர்களின் விபரங்கள் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்திடம் வழங்கப்பட்டன.
இதேவேளை இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்கு நீரில் 24 மணி நேர கண்காணிப்பை
அதிகரிப்பதன் மூலம், வடக்கு மேற்கத்திய மற்றும் வடக்கு நீரில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam