82 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது
இலங்கை கடற்படை, பொலிஸ் பிரிவுடன் இணைந்து நடாத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம்(9) நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சா
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குளிர்ரூட்டப்பட்ட கனரக வாகனத்தை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
வாகனத்தில் ஐந்து (05) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் நூற்று எண்பத்தேழு (187) கிலோ மற்றும் எண்ணூற்று எழுபத்தைந்து (875) கிராம் கேரள கஞ்சாவு இரண்டு (02) காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் வாகனம், துன்கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து கொழும்பின் கெசல்வத்த பகுதியில் சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு, குறித்த மோட்டார் வாகனத்தில் ஒன்பது (09) பார்சல்களில் அடைக்கப்பட்ட பதினெட்டு (18) கிலோகிராம் எண்பத்து மூன்று (83) கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த மோட்டார் வாகனமும் கைது செய்யப்பட்டுள்ளது.
மொத்த பெறுமதி
இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி எண்பத்திரண்டு (82) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களுடன் கேரள கஞ்சா தொகை, கனரக வாகனம் மற்றும் மோட்டார் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.