அரசுக்குக் கூஜா பிடிப்பது பற்றி பேசும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் - முஸம்மில் மொஹிதீன்
முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) ஒரு சாணக்கிய அரசியல் தலைவர் என்பதற்கு மாறாக அசாணக்கிய தலைவர் என்ற பட்டத்தைப் பெறும் முயற்சி தானாகவே தன் தலையில் மண்ணைப் போடும் விடயமே இந்த கூஜா பேச்சு எனத் தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன்(Muzammil Mohideen) தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் இன்று(6) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சில தினங்களாகத் தனது நான்கு சக முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்குக் கூஜா பிடிப்பது பற்றி பேசுவது உண்மையில் வெறும் வேடிக்கையான பேச்சும், சமூகத்தை ஏமாற்றும் பேச்சாகவும் உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அண்மையில் கிண்ணியா விஜயம் செய்து அந்த கூஜாக்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கு தேசிய அமைப்பாளர் வழங்கியது ஏன்? தற்சமயம் திடீர் என அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாறுமாறாக ஊடகங்களில் திட்டித்தீர்ப்பதன் காரணம் என்ன என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
இவர்கள் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படாவிட்டால் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி புதிய இளம் தலைமைகளுக்கு இடம் கொடுத்து ஒரு புதிய யுகம் படைக்க முடியாதா? இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்டமைப்பில் அடுத்த வரிசைகளில் எத்தனையோ சிறந்த ஆளுமை மிக்க நபர்கள் உள்ளார்கள்.
அவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கி சம்பந்தப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறம் தள்ளி விட வேண்டிய காலத்தை மழுங்கி கடத்திவிட்டு திடீர் என இந்த வேசம் யாரையும் சிந்திக்க வைக்கத் தோன்றும். எனவே முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் ஏமாறாமல் புதிய விவூகங்களை கைக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
