மனித சுயநலத்தின் சட்டரீதியான சட்ட விரோதம்: இரையாகும் இயற்கை

Sri Lanka Weather World
By Ashik Apr 26, 2024 06:18 AM GMT
Report

மனிதன் தனது சுயநலத்தால் நிகழ்கால எதிர்கால சந்ததிகளின் இருப்பு பற்றிய எந்த விதமான தூர நோக்கும் இன்றி செயற்படுகிறான்.

இயற்கையோடு இயல்பாக ஒன்றித்து வாழும் வாழ்வியலுக்கு எதிராக இயற்கையை எதிர்த்து தன்னையும் தன் சந்ததியையும் தானே அழிக்கின்றான் என்பதை அறிவு பூர்வமாக உணராமல் அல்லது உணர்ந்தும் தெளியாமல் தன் நலனில் மட்டுமே சிரத்தை கொள்கிறான் என்பதே வேடிக்கையான உண்மை.

இயற்கை தன்னியல்பை எப்போது இழக்கிறதோ அப்போது மனிதன் இயல்பாக உயிர் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதே இயற்கையின் சமநிலை கட்டமைப்பு.

அதனால் தான் ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும் என்பது நியதி. ஒரு மனிதன் சுகதேகியாக சுவாசிக்க 422 மரங்கள் தேவை. கனடாவில் ஒருவருக்கென பத்தாயிரம் மரங்கள் உள்ளன.

அனாதை ஆக்கப்பட்ட ஆறுகள்

உலகில் ரஷ்யாவில் தான் அதிக மரங்கள் உள்ளன, சுமார் 642 பில்லியன் இருக்கும். அதேபோல் கனடா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் குடித்தொகைகளுக்கு ஏற்ப போதுமான மரங்கள் உள்ளன. ஒரு வாகனத்தின் நச்சுப் புகையை கட்டுப்படுத்த ஆறு மரங்கள் வேண்டும்.

நச்சுக் காற்றை மூச்சுக் காற்றாக மாற்றுவது மரங்களே. ஒரு யானை ஒரு நாளைக்கு முந்நூறு தொடக்கம் ஐநூறு வரை மரங்களை உற்பத்தி செய்கிறது. தனது வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் மனிதன் இவற்றையெல்லாம் வகை தொகையாக அளிக்கின்றான்.

nature-and-human-activities

வடக்கு - கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஆறுகள் அனாதை ஆக்கப்பட்டு விட்டன. இவற்றில் சட்டரீதியான சட்ட விரோதத்தால் கட்டுப்பாடு இன்றி மணல் அகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆறுகள் இயல்பாகவே நிலப்பரப்பிலிருந்து ஐந்து தொடக்கம் ஏழு மீற்றர் ஆழமானவை. இருபது தொடக்கம் இருபத்தைந்து மீற்றர் அகலமானவை.

ஆனால், தற்போது பல மடங்கு ஆழமாகவும் நீளமாகவும் காணப்படுகிறது. ஆற்றங்கரையில் இருபுறமும் உள்ள பல நூற்றாண்டு கடந்த மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அதிக மணல் அகழ்வினால் இயற்கைச் சமநிலை மாறுபடும். மண்ணின் தரம் குன்றும். கடல் நீர் நிலப்பரப்புக்குள் ஊடுருவும். உவர் நீர் உருவாகும்.

பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குலைந்து விடும். நீரின் தரம் குன்றி விடும், மரங்கள் பாதிக்கப்படும் போது இயல்பாகவே வறட்சி ஏற்படும். நிலத்தடி நீர் விரைவில் ஆவியாகிவிடும். நன்னீர் மட்டம் கீழ் இறங்கிவிடும். தொற்றா நோய்கள் ஏற்படும். விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும்.

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இணைய வழியில் ஏலம்: இலங்கை சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மனித வன்கொடுமைகள் 

இதனால், உணவு உற்பத்தி நலிவடையும். ஆரோக்கியமற்ற பிறப்பு வீதம் ஏற்படும் சமூக பிறழ்வு உருவாகும். இன்னும் பல கேடுகள் மனிதனுக்கு ஏற்படும். ஒரு சதவீத மரங்கள் அழிந்தால் சமூகத்தில் எட்டு விதமான கொசுக்கள் உற்பத்தியாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் கொசுக்களால் தான் அதிக மரணம் நிகழ்கிறது.

nature-and-human-activities

மண்ணுக்கும் மரத்திற்கும் கேடு விளைவிப்பதால் இயற்கை அனர்த்தம் ஏற்படும். வெப்பமயமாதல் அதிகரிக்கும். தற்போது அதிகூடிய வெப்பநிலை கூட இதற்கு நிகழ்கால உதாரணம் அது மட்டுமன்றி அதிகமான இயல்பற்ற இயற்கை சீற்றம் ஏற்படும். பருவம் கடந்த மாறுதல் உருவாகிறது. காலக்கணிப்பை விஞ்சி விடுகிறது. தற்போது வளைகுடா நாடுகளில் அதிகூடிய கனமழை பெய்வது காலநிலை மாறுதலே.

இது எல்லாம் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் வன்கொடுமையின் விளைவுகளே இயற்கை மீதான தாக்குதல்களை மனிதன் நிறுத்துவதாக இல்லை. இவற்றை ஒழுங்கு முறையாக சீர் படுத்த முடியவில்லை. அதற்கு அனுமதி வழங்குகின்ற திணைக்களங்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்குகின்றன.

அரச அதிகாரிகள் 

அதனால் கட்டுப்படுத்துவதில் பல்வேறு விதமான சவால்கள் உள்ளன. உலகில் காபன் படிவு அதிகமானது என காலநிலை தொடர்பான டுபாய் மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போதைபொருள் மாபியாவை போல் மணல் அகழ்விற்கும் பெரிய மாபியாக்கள் உருவாகிவிட்டன.

nature-and-human-activities

இதை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸார், புவிச்சரிதவியல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனத்திணைகளம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியன இலஞ்சம் பெற்றுக் கொண்டு இயற்கையை ஏலம் கூறி விற்பனை செய்கின்றனர். மணல் அள்ளிச் செல்லும் டிப்பரிலிருந்து வழிகிறது ஆற்றின் கண்ணீர் என்பதை எந்த அதிகாரியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இதில் பல ஆற்றங்கரைகளில் அதிக அளவில் விவசாய செய்கையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் தற்போது அந்த இடங்கள் எல்லாம் உவர் நீர் அதிகரித்து விட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குட்படுகிறது விவசாயம் இல்லாவிட்டால் மனிதன் உயிர் வாழ முடியுமா? இந்த ஆறுகளில் ஒரு மண் கூட்டம் உருவாக 08 தொடக்கம் 12 வருடங்கள் தேவை என கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

இயற்கை வளச் சுரண்டல்

ஆனால் தற்போது ஆறுகள் மணல் இன்றி சேத்து நிலமாக உள்ளன. இதில் பல இடங்களில் நீதிமன்றங்கள் தடை செய்த போதும் கூட அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் அபகரிக்கப்படுகிறது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியிடத்து நபர்களாலும் மணல் கொள்ளை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

nature-and-human-activities

இதில் அரச படையினரும் கூட ஈடுபட்டு வருகின்றனர். சீமந்து, கல், சாடி மற்றும் தூண் போன்றவற்றை உற்பத்தி செய்து தமது முகாம்களுக்கு முன்னுக்கு வைத்து விற்பனை செய்தும் வருகின்றனர். அதேபோல் கடற்கரை பகுதிகளிலும் மண் அகழ்வதால் பல ஊர்களில் கடல் நீர் உள்ளே வருகிறது.

எனவே, இந்த இயற்கை வளச் சுரண்டலுக்கு அரசியல்வாதிகள் பின்னணியிலும் அதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைப்பதால் எப்படி தடுப்பது?

பல போராட்டங்கள் பல கூட்டங்கள் பல கள விஜயங்கள் எல்லாம் நடைபெற்றும் எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆகவே, இயற்கைக்கு எதிரான மனிதனின் செயற்பாடு பாரிய இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தும் நில அதிர்வு, சுனாமி, அதிக மழை, புயல் மற்றும் அதிக வெப்பம் என்பன எதிர்காலத்தில் நிகழலாம் என நாசா உட்பட பல சூழலியல்,மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் மனிதன் இயற்கையை அழித்து தனது சொகுசு வாழ்வியலை உயர்த்தும் நோக்கை கைவிட்டதாக தெரியவில்லை.

ஜனநாயகம் 

இவர்களுக்கு உதவியாக அதிகாரிகளும் உள்ளதால் சட்டவிரோத மண் அகழ்வு, காடழிப்பு போன்றவற்றை நிறுத்துவது என்பது இலகுவான விடயம் அல்ல. ஆகவே, இந்த அதிகாரிகளுக்கும் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கையில் மணலும் மரமும் இவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

nature-and-human-activities

வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் அது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த வேண்டும். இல்லையேல் இதை எந்த சந்தர்ப்பத்திலும் தடுக்க முடியாது. இயற்கைக்கு எதிரான செயற்பாட்டில் மனிதன் தோற்றே போவான் இயற்கையின் சமநீதி அறம் எவருக்கும் எதற்கும் இடம் கொடுக்காது.

குற்றம் என்று தெரிந்தும் தண்டிக்க முடியாத சட்டம். ஊழல் என்று தெரிந்தும் ஒழிக்க முடியாத சட்டம். தீமை என்று தெரிந்தும் தடை செய்ய முடியாத சட்டம். இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம்.

எனவே, 'இயற்கையை காப்போம் இயல்பாக வாழ வழி தேடுவோம்' என வள்ளுவம் கூறுவது போல் "செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்". 

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US