நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு (video)
இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
யாழ்-வரணி
யாழ்-வரணி பகுதியில் மினி சூறாவளி வீசியமையால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
வரணி கரம்பைக்குறிச்சி, நாவற்காடு பகுதிகளிலே பலத்த காற்று வீசியுள்ளது.
நாவற்காடு அண்ணமார் ஆலய மண்டபத்தின் கூரை சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பகுதியிலும் மினி சூறாவளி வீசியமையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி- தீபன், கஜிந்தன்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, குரவில், மூங்கிலாறு பிரதேசங்களில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன் நீண்ட நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்விடங்களில் நின்ற பல மரங்கள் முறிந்து விழுந்ததால் சேதவிபர மதிப்பீடுகளை கிராம சேவையாளர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஜீவநகர் மாதிரி கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.
அண்மை காலமாக நாட்டில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- கீதன்











வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
