நேட்டோ நாடுகளை சீண்ட வேண்டாம் - புடினுக்கு பகிரங்க மிரட்டல்
உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெற்றிக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றார்.
ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க நேட்டோ மற்றும் அதன் உறுப்பு நாடுகள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகள் வேடிக்கை பார்க்காது
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பானது இன்னொரு நாட்டிற்கு விரிவடைவதை நேட்டோ உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஜார்ஜியா, மால்டோவா அல்லது உக்ரைனை சீண்டியது போல் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் விளாடிமிர் புடின் ஏதாவது தொல்லை தர நினைத்தால், நேட்டோ உறுப்பு நாடுகள் வேடிக்கை பார்க்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இது வெறும் உக்ரைன் மீதான தாக்குதல் மட்டுமல்ல, 40 மில்லியன் மக்கள் குடியிருக்கும் சுதந்திர ஜனநாயக நாடு மீதான தாக்குதல் எனவும் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சாடியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri
