இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் - ஜனாதிபதியின் விசேட கட்டளை
பொது பாதுகாப்பை முன்னெடுத்து செல்வதற்காக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தும் விசேட கட்டளை ஒன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளையை ஜனாதிபதி மீண்டும் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு சட்டமூலத்தின் 12வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி, இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற அவை நிகழ்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர், ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோன்றதொரு கட்டளை கடந்த மாதமும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam