இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் - ஜனாதிபதியின் விசேட கட்டளை
பொது பாதுகாப்பை முன்னெடுத்து செல்வதற்காக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தும் விசேட கட்டளை ஒன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளையை ஜனாதிபதி மீண்டும் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு சட்டமூலத்தின் 12வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி, இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற அவை நிகழ்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர், ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோன்றதொரு கட்டளை கடந்த மாதமும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
