வறட்சியான காலநிலையினால் நீர் விநியோகத்திற்கு தடை ஏற்படலாம்
நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு தடை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் அநேக பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் நிலையில் நீர் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
நீர் மூலங்களின் நீர் அளவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.