தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் "சமூக சக்தி" வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் நேற்றையதினம்(18) நடைபெற்றது.
அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய அளவிலான திட்டங்களில் பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதி செய்தல், கிராம மக்கள் மூலமாகவே கிராமப்புறங்களை முழுமையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் சமூக சக்தி செயலகத்தின் பணிப்பாளர் புத்திக ஜெயதிஸ்ஸவினால் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரதீப் தனபால, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.











மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
