யாழ்.மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபையின் முதன்மை வேட்பாளர்
நீண்ட காலமாக கட்சியுடன் இணைந்து செயற்பட்டு, முக்கியமான
கால கட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையில் மத்திய குழுவில்
யாழ் .மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் களமிறக்கப்படவுள்ளார்.
மேற்படி தீர்மானம் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்டுள்ளதுடன்,பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் வை.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான ஒரு பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது.
மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல் தங்களுக்கு நன்மையை
தேடாமல் இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு
திருப்திபடுத்தி கொடுக்கலாம்.
மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபை செயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும் வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்ற கட்டத்திலே அவர்கள் நினைக்கின்றார்கள் பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அது மட்டும் தான் வித்தியாசம்.
தெற்கிலே மொட்டு மட்டும் யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டு தேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது யானை தேர்தல் காலத்திலே முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையிலே அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கு எடுக்கலாமென்று நினைக்கிறார்கள்.
மொட்டுடன் யானை கூட்டு
யதார்த்தத்திற்கு முரணாண வகையிலே சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள்.
மக்களின் உண்மையான யதார்த்தம் மாறப்போவதில்லை மாறாக மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்றால் நாங்கள் செய்தி ஒன்றை அவர்களுக்கு கொடுக்கப் போகின்றோம் ஆனால் அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என சிந்திப்பார்கள்.
தெற்கிலே ராஜபக்சவுகளுக்கு மக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலே ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக உலகமே நிராகரிக்கின்ற கடந்த தேர்தலிலே மூன்றில் இரண்டு
பெரும்பான்மை எடுத்தற்காக மொட்டுடன் யானை கூட்டு சேருவது என்பது வேடிக்கையான
விடயமாகும் என்றார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
