மீன் உட்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை! வெளியாகியுள்ள அறிவிப்பு
மீன் நுகர்வு தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து இரசாயனம் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் வெளியாகியுள்ள நிலையில் மீன் நுகர்வுக்கு ஏற்றது அல்ல என்று பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், நாராவின் ஆரம்ப அறிக்கையின்படி, மீன் உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இன்று நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam