கோர யுத்தத்தின் அமைதி சாட்சியமாய் நந்திக்கடல்! மலர் தூவி அஞ்சலித்த அருட்தந்தை
இலங்கையில் இடம்பெற்ற கோர யுத்தம் நிறைவுற்று இன்றுடன் 12 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
தற்போது நாட்டில் பரவி வரும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையின் காரணமாக யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நடத்தப்படக் கூடாது என தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இறுதி யுத்தத்தின் அவலங்களை தன்னுள் புதைத்துக் கொண்டு அமைதியாய் இருக்கும் நந்திக்கடலில் மலர் தூவி இன்று பலர் அஞ்சலிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட பலர் இன்று நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.