நாமல் நாளை சபைக்கு வருவாரா.. அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள்..
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...
YOU MSY LIKE THIS..