நாமலின் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பக்கம் நின்று செயற்பட்டவராவார்.ஆனால் கோட்டாபய ஆட்சியில் மொட்டு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டவராவார்.
அவருக்கு வழங்கப்பட்ட பதவிகள்
இவர்,கட்சியின் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். நேற்று (22.01.2026) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரனவுடன், காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் குழுவும் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri