நாமல் மற்றும் ரணிலின் இழிவான செயல்கள்! ஜனாதிபதியாகும் வாய்ப்பு கேள்விக்குறி..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீரா பெரேரா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இழிவான செயல்
ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய வரலாறு தற்பொழுது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்டது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியானால் புதிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படும் கருத்துக்கள் நகைப்பிற்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டும் தீவிர சேறு பூசல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவு படுத்தக்கூடிய வகையில் ராஜபக்ச - ரணில் விக்மரமசிங்க மிக இழிவான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கல்வி அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் திறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி வணிக மயப்படுத்தப்படுவதனை வன்மையாக கடுமையாக எதிர்ப்பதாகவும், குறிப்பாக பாடசாலைகளை மூடும் திட்டம் ஏற்புடையது அல்ல எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam