கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில், இந்த வழக்கு இன்று(12.01.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல, மகள் அமாலி நாயனிகா ரம்புக்வெல மற்றும் அவர்களது பணியாளரான நிபுணி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கை அடுத்த மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளிநபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை தனது சொந்த வங்கிக் கணக்குகளில் வைப்பில் இட்டுள்ளார்.
இந்த ஊழல், மோசடி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி பிரதிவாதிகளுக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam