நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தில் நேற்று(14.04.2024) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயக பெருமான் இரதத்தில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
மகோற்சவ பெருவிழா
அத்துடன் இந்த தேர்த்திருவிழாவில் பெருமளவிலான விநாயக அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருள் கடாட்சத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி கொடியேறத்துடன் ஆரம்பமான வருடார்ந்த மகோற்சவ பெருவிழா இன்று(15) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளது.
மேலும் மகோற்சவ பெருவிழாவின் போது அடியவர்கள் அங்கபிரதட்டை, கற்பூரசட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |