நல்லை ஆதீன முதல்வரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி
யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15.01.2023) விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்போது, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அதன்பின் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் யாழ் விஜயம்
இந்தச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.