அமெரிக்க அதிபரின் மாளிகை மீது பறந்த மர்ம விமானத்தால் குழப்பம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது மர்ம விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை எனவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானியிடம் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன், அவரது மனைவியுடன் தங்கியிருந்த நிலையில், அவரது மாளிகை மீது சிறிய ரக விமானம் ஒன்று நுழைந்துள்ளது.

இதனையடுத்து, அந்த விமானம் இடைமறித்து திசை திருப்பிவிடப்பட்ட நிலையில், பைடன், ஜில் பைடன் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானத்தின் விமானியிடம் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam