சுவீடனில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான மர்மப்பொருள்! வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தெற்கு சுவீடனின் மால்மோ நகரில் சந்தேகத்திற்கிடமான மர்மப்பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள பல வீதிகளை நேற்று பொலிஸார் முடக்கியுள்ளனர்.
குறித்த பொருள் வெடிக்கக்கூடிய அபாயம் கொண்டதாகக் கருதப்படுவதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவசர வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தீவிர விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தேசிய வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அந்த பொருளை ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மால்மோ நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியே வர வேண்டாம் என பொலிஸார் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையினால் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மர்மப்பொருள் என்ன என்பது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri