மியன்மார் அகதிகள் விவகாரம்: மட்டக்களப்பு பள்ளிவாசலுக்கு முன்னால் போராட்டம்
மியன்மார் (Myanmar) ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மட்டக்களப்பில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (17) மட்டக்களப்பு - ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) விவசாய சம்மேளனம், ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
மியன்மார் அகதிகள்
இதனையடுத்து, இன்று பகல் 1 மணிக்கு தொழுகையின் பின்னர் அங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை நடைமுறைபடுத்து, யு.என்.எச்.சி.ஆர். அப்பாவி மியன்மார் அகதிகளை பெறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பாரப்படுத்து, மியன்மாரில் மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியை கிளப்பாதே, போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri