போராட்டத்தில் குதித்த மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது இன்று(31.8.2026) பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
போராட்டம்
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு போன்ற பல விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காகவே இந்த முயற்சி..! முன்னாள் பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு


