62ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட முத்துநகர் விவசாயிகள்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் தொடர்ச்சியாக நேற்று 62ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாரி மழையையும் பாராது திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சூரிய மின்சக்தி உற்பத்திகளுக்காக தங்களது விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்கியதாக சுட்டிக்காட்டி போராட்டக்காரர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தீர்வு கிடைக்கவில்லை
இது தொடர்பில் பல போராட்டங்களை நடத்திய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதி ஊடாகவோ மாவட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் மூலமோ தீர்வு கிடைக்கல்லை என்றும் இரட்டை வேடம் போட்டு நாடகமாடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் வழங்கிய வாக்குறுதி முடிவுற்று இரண்டாவது தடவையாக மீண்டும் கடந்த 13.11.2025ஆம் திகதியன்று பிரதமர் அலுவலகம் சென்றபோது 10 நாட்களுக்குள் திருகோணமலையில் கலந்துரையாடல் மூலம் இணக்கம் காண முடிவு எட்டப்பட்டதாக முத்துநகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.


