முத்து நகர் விவசாயிகளின் 26 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12)26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முன்னணியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்றும் அவர்கள் இந்த சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
முத்து நகர் விவசாயிகள்
பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளன எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதே வேலை முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று (11) மாலை கைது செய்துள்ளனர்.
இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் தொடர்ந்தும் போராட்டங்களுடனேயே செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தொடர் போராட்டம்
திருகோணமலை மாவட்ட செயலத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது முன்னுக்கு பின்னுக்கு முரணான கருத்தாக சூரிய மின் சக்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதா இல்லையா தொடர்பான கருத்துக்களையே ஆளும் தரப்பு எம்.பிக்கள் கூறுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுமார் 800 ஏக்கரில் தற்போது வரைக்கும் 200 ஏக்கரளவில் சூரிய மின் சக்தி திட்டத்துக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப் பகுதியில் உள்ள இரு குளங்களை மூடி இதனை முன்னெடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.









ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
