ஐபிசி தமிழின் அனுசரணையில் யாழில் முதன்முறையாக முத்தமிழ் விழா 2022 (LIVE)
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக “முத்தமிழ் விழா 2022” நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்வானது இன்றைய தினம் (16) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ் மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது யாழ் மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் “இன்றைய உலக நடைக்கு பொருந்தாத அறங்களை வகுத்துத்தந்த வள்ளுவர் குற்றவாளியா?” எனும் தொனியிலான “வழக்காடுமன்றம்” உட்பட நாத சங்கமம் மற்றும் இசை ஆராதணை என இசை நிகழ்வுகளும், சத்தியவான் சாவித்திரி மற்றும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்றியல்களை சித்திரிக்கும் நாடங்களும் அரங்கேறவுள்ளன.
மேலும், ஐபிசி தமிழின் அனுசரணையில் காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இயற்துறை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
முத்தமிழ் விழா 2022 நிகழ்வின் நேரலை,






களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan