வீடுகளில் தொழுவோம்! அகில இலங்கை வக்பு சபையின் அறிவிப்பு
பள்ளிவாசல்களை மூடி வீடுகளில் தொழுது கொள்ளுங்கள், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடப்டோம் என அகில இலங்கை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அசாதாரண கோவிட் நிலைமையிலும் கட்டுப்படாது யாழ். பள்ளிவாயலில் தொழுகை நடாத்தியதாக கூறப்பட்ட நிலையில், குறித்த பள்ளிவாயல் தலைவர் உட்பட நிருவாக சபையை வக்பு சபை நீக்கியுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு செயற்படுங்கள் என அகில இலங்கை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட திருமலை மாவட்ட பள்ளிவாசல்கள் ஒன்றியத்தின் தலைவருமான எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.