அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள்

Kandy Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Harini Amarasuriya
By Vethu Apr 28, 2025 03:28 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சிறி தலதா வந்தனாவ எனும் யாத்திரை நிகழ்வு நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

பாரிய எதிர்பார்ப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த யாத்திரை நிகழ்வு, அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், கண்டி மாநகரில் முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசாங்கத்திற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

அடிப்படை வசதி

யாத்திரை நிகழ்வில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதும், அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கும், தேவையான பல உதவிகளை செய்துள்ளனர்.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

மக்களுக்கு உணவு வழங்குவதுடன், தங்கியிருப்பதற்கும் இடங்களை வழங்கி முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இதன்மூலம் இன, மத நிலையை கடந்து முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 3 கோடி செலவில் இசை நிகழ்ச்சி! பாரிய மோசடி தொடர்பில் ஆளும் தரப்பு விளக்கம்

யாழில் 3 கோடி செலவில் இசை நிகழ்ச்சி! பாரிய மோசடி தொடர்பில் ஆளும் தரப்பு விளக்கம்

யாத்திரை நிகழ்வு

குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள்.

குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன.

கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

இன நல்லிணக்கம்

நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

அது மாத்திரமின்றி கண்டியில் வர்த்தக நிலையங்களை திறந்து கொடுத்தார்கள். மழை பெய்யும் போது கடைகளுக்குள் நுழையவும் அனுமதி கொடுத்தார்கள்.

சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US