முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பில் சர்ச்சை
அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர்களுக்கு இஸ்லாம் கலாசார உடை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கோவிட் - 19 காலத்தில் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் தாமதம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எந்த சட்டக் கட்டுப்பாடும் இல்லை
அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் தாதியர்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது அவர்களின் கலாசார மற்றும் மத விழுமியங்களுக்கு ஏற்ப ஆடை அணிவதைத் தடுக்கும் எந்த சட்டக் கட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, அமைச்சர் சுனில் செனவி, பிரதியமைச்சர்கள் முனீர் முலாஃபர் மற்றும் அர்காம் இல்லியாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாஸ்மிம் ஷெரிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 15 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |