ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முஷ்பிகுர் ரஹீம்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim ) தனது ஒருநாள் சர்வதேச வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
தமது அணி ஐசிசி ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டியில் வெற்றி பெறாமல் வெளியேறிய கடந்த சில வாரங்கள் சவாலானவை என்று கூறியுள்ள அவர், சமூக ஊடகங்களில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒருநாள் போட்டி வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் நேற்று (05) அறிவித்துள்ளார்.
274 போட்டிகள்
"உலக அளவில் எங்கள் சாதனைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் ஒன்று நிச்சயம். நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும் போதெல்லாம், 100 வீதத்திற்கும் அதிகமாக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் செயற்பட்டேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு முஷ்பிகுர் சர்வதேச அளவில் அறிமுகமானார், அடுத்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு அவர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.
தனது வாழ்க்கையில் 274 போட்டிகளில் ஒன்பது சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன் 7795 ஒருநாள் ஓட்டங்களை பெற்றுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri