வெளிநாடுக்கு தப்பிச் செல்ல முயன்ற கொலைச் சம்பவமொன்றின் சந்தேக நபர் கைது
பாணந்துறையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றின் சந்தேக நபர் இன்றைய தினம்(22) விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரண பிரதேசத்தில் அண்மையில் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.
பொலிசாரினால் கைது
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபர் காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் முக அடையாளத்தின் ஊடாக ஆட்களை அடையாளம் காணும் கருவியின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[VA7LRSF
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan