கொலை முயற்சி "ட்ரோன்" தாக்குதலில் இருந்து தப்பிய ஈராக்கிய பிரதமா்
ஈராக்கின் பிரதமா் “ட்ரோன்“ கொலை முயற்சித் தாக்குதலில் தப்பியுள்ளாா்.
ஈராக்கின் தலைநகா் பக்தாத்தில் அமைந்துள்ள தமது வீட்டை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டின் பிரதமா் முஸ்டபா அல்- கட்ஹ்மி Mustafa al-Kadhimi தொிவித்துள்ளாா்.
முன்னதாக வெளியான தகவல்கள் பிரதமா் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தொிவித்திருந்தன.
எனினும் , அதனை மறுத்துள்ள ஈராக்கின் பிரதமா், நாட்டு மக்கள் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்துக்கொள்ளவேண்டும் என்று தமது டுவிட் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளாா்.
சம்பவத்தின்போது பிரதமாின் பாதுகாப்புப்பிரிவைச் சோ்ந்த 6 போ் காயமடைந்துள்ளனா்.
இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை உாிமைக்கோரவில்லை.
ஈராக்கின் பிரதமா் முஸ்டபா அல்- கட்ஹ்மி Mustafa al-Kadhimi முன்னா் நாட்டின் புலனாய்வுத்துறை தலைவராக செயற்பட்டு, கடந்த மே மாதத்திலேயே பிரதமாக பதவியேற்றாா்.