கிளிநொச்சியில் இடம்பெற்ற முரசு 90 நூல் வெளியீட்டு விழா
கிளிநொச்சி - முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் 1990ஆம் ஆண்டு உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் முரசு 90 நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகள் இன்று (25.08.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்து கொண்டோர்
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற முருகானந்தா கல்லூரியில் இந்நிகழ்வு இன்று பகல் 9:00 மணிக்கு நிகழ்வின் தலைவர் கி. உதயகுமார் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி அ.சிவனருள்ராஜா மற்றும் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இலங்கையின் பலபாகங்களிலும் வாழும் 1990ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |