பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய வேலன் சுவாமிகள்
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மே 18 நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் உச்சம் பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியின் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இரவு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே நினைவேந்தல் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றுள்ளது.
வேலன் சுவாமிகளோடு இணைந்து பொதுமக்கள் சிலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.