பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஏற்பாட்டில் இன்றையதினம்(18.05.2025) இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில், கவுன்சிலர் சசி மயில்வாகனம், தமிழீழ தேசியக்கொடியை முன்னாள் போராளி முகுந்தன் கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச்செல்வம் உதயராஜாவின் மகன் பவசுதனும் ஆகியோர் பொதுச்சுடரினை ஏற்றினர்.
முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை
அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றி நினைவுகூர்ந்தனர்.

இதனைத் தொடந்து, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையை பாலா மாஸ்டர் கந்தையா பாலகிருஷ்ணன் வழங்கினார்.

இதனையடுத்து, அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan