இந்தியா அரையிறுதிக்கு தகுதியாகாது : பாகிஸ்தான் முன்னாள் வீரர் மீண்டும் அதிரடி
இந்திய அணி டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொஹமட் அமீர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது 'ஹார்னா மனா ஹை' (Haarna Mana Hai) என்ற நிகழ்ச்சியில் பேசிய அமீர், இந்தியா குறித்த தனது கணிப்பை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய துடுப்பாட்ட வரிசை சரிவைச் சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிரடி தொடக்க வீரர்
தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தற்போதைய நிலையில் இந்தியாவை விட சிறந்த அணிகளாக உள்ளன அவர்கள் முழுமையான கிரிக்கெட்டை (Complete Cricket) விளையாடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

எனது கருத்தை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் அது உங்கள் விருப்பம் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று நான் கட்டாயப்படுத்தி சொல்ல வேண்டுமா அவர்கள் சென்றால் எனக்கென்ன செல்லாவிட்டால் எனக்கென்ன என்று அவர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா-வை ஒரு ஸ்லாகர் Slogger - நுணுக்கமின்றி பந்தை ஓங்கி அடிப்பவர் என்று அமீர் விமர்சித்திருந்தார் இதற்கு பல முன்னாள் இந்திய வீரர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தியா இருக்கும் பிரிவில் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை சீரற்றதாக இருப்பதாக அமீர் கருதுகிறார்.
தனது கணிப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்ததே தவிர, இந்திய அணி மோசமான அணி என்பதால் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam