கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசல் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கலன் விடுவிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இந்த கொள்கலன் வாகனங்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே அனுப்பப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இங்குருகடே சந்தியிலிருந்து ஒருகொடவத்தை வரை தொடரணி நீட்டிக்கப்படலாம்.
அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
இந்த கொள்கலன் வாகனங்கள் துறைமுக எல்லைக்கு வெளியே அனுப்பப்பட்டால், அவற்றின் பாதுகாப்பு குறித்து சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,
கொழும்பு துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை வௌியேற்றுவதிலும், அவற்றை துறைமுகத்திற்கு வௌியேயுள்ள முனையங்களில் பரிசோதிப்பதிலும் இவ்வாறு பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த மாதத்தில் அதிகளவிலான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதால், இந்த நெரிசல் மேலும் தீவிரமடையக்கூடும் என கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தியாவது இந்த நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அச்சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam