முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி செலுத்திய மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர்
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை நினைவு தினத்தை இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதன் தனது இல்லத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
பல அடக்குமுறைக்கு மத்தியிலும் கோவிட் அச்சம் காரணமாக நினைவு நிகழ்வை பொது வெளியில் செய்ய முடியாத காரணத்தினால் கனத்த இதயத்தோடு தனது வீட்டிலேயே அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்ட காரணத்தினால் வீட்டிலேயே நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .