உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை
வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு குட்செட் வீதி கருமாரியம்மன் கோவிலில் இன்று நடைபெற்றது.
இதன்போது, அந்தணர் ஒன்றியத்தின் செயலாளரும் ஆலயத்தின் பிரதம குருவுமான பிரபாகரக்குருக்களினால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இவ் வழிபாடுகளில் சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றபோது ஆலய வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
