முள்ளிவாய்க்கால் வடுக்களை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நித்தம் சஞ்சிகை
நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழ் முல்லைத்தீவு - முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடுசெய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் விசேடமாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பதிவுகளைத் தாங்கிவந்த நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீட்டுவிழாவானது முல்லைத்தீவு, முல்லைக்கல்விநிலைய நிர்வாகி தேவராசா தேவசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நித்தம் மாதசஞ்சிகை
இந் நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு செய்யப்பட்டது.
அந்தவகையில் நித்தம் மாதசஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழின் முதற்பிரதியைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்விநிலைய மாணவர்கள், ஆசிரியர்களிடம் சஞ்சிகையின் ஏனைய பிரதிகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
