தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நான்காம் நாளாக அனுஷ்டிப்பு..!
தமிழினப்படுகொலை வாரத்தின் நான்காம் நாளான இன்று(14.05.2026) தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி, அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, முல்லைத்தீவு - விசுவமடு, றெட்பானா பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், தேராவில் மற்றும் இளங்கோபுர மக்களின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு வலி நிறைந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் எனும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.


இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலதிக தகவல் - ஷான்
நெல்லியடி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று(13.05.2026) நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினத்தின் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை ஏற்றிவைக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
திருகோணமலை - மூதூர்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மூதூர், அம்மன்நகர் பகுதியில் நேற்று(13.05.2026) மிக உணர்ச்சிகரமான முறையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை நினைவேந்தல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் மற்றும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மலர் தூவி, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

போர்க்காலத் துயரத்தையும், மக்களின் பசியையும் பறைசாற்றும் அடையாளமாக அமைந்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” தயாரிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

மேலதிக தகவல் - கியாஸ் ச(f)பி
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று(14.05.2026) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்ற நாளில் ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டிருந்தது.
மேலதிக தகவல் - தேவந்தன்
கிளிநொச்சி - பொதுச் சந்தை
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் இன்று(14.05.2026) நடைபெற்றுள்ளது.
மேலதிக தகவல் - தேவந்தன்
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam