மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா.. மனதை பதைபதைக்க வைக்கும் பல ஆதாரங்கள்!
மகிந்த ராஜபக்ச ஒரு குழந்தையை ஏறெடுத்து பார்க்கின்ற புகைப்படமொன்று வெளியாகி இருந்தது.அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபொழுது பாலச்சந்திரனின் முகத்தோற்றம் போல காட்சியளித்து இருந்ததாக கூறப்படுகின்றது.
தழிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன், 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்டார்.
இறுதிக்கட்டப் போரில் எல்லாம் முடிந்து விட்டது என்றாலும் பச்சிளம் பாலகனான பாலச்சந்திரனுக்கு ஏன் இப்படியானதொரு அநீதியை இழைத்தார்கள் என்ற கேள்வி தான் இன்று வரை விடைதெரியாமால் இருக்கின்றது.
மகிந்த அரசாங்கம் ஏன் இப்படியானதொரு அவல நிலைக்கு பாலச்சந்திரனை தள்ளியது.மகிந்தவின் பேரப்பிள்ளைகளின் வயதினை ஒத்தவர் தான் பாலச்சந்திரன்.
பாலச்சந்திரனை கொடூரமான வகையிலே மகிந்த அரசாங்கம் கையாண்டு இருந்ததை உலகம் ஒருவேளை மன்னிக்க முற்பட்டாலும் கூட இயற்கை அவர்களை தண்டித்தே தீரும்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,