மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுத்த பொலிஸார்
மட்டக்களப்பு (Batticaloa) நகர் நுளைவாயில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாவது நாளான இன்று (17.05.2024) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வின் போது, திடீரென அந்த பகுதி வீதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் கஞ்சி குடிப்பதற்காக சென்றபோது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும், பொலிஸாரின் தடைகளை மீறி பெதுமக்கள் வாகனங்களை நிறுத்தி கஞ்சியை வாங்கி குடித்துள்ளனர்.
அதேவேளை, கஞ்சி வழங்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறீதரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri