தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

Tamils Jaffna Trincomalee Mullivaikal Remembrance Day
By Independent Writer May 17, 2025 06:58 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

திருகோணமலை

திருகோணமலை- தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் கோயில் சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி இன்று (17) காலை கொட்டும் கனமழையிலும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது இலங்கை தமிழரசு கட்சியின் தம்பலகாமம் பிரதேச சபைக்கு உறுப்பினர்களாக தெரிவாகியவர்களின் ஏற்பாட்டிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக மாறியுள்ளன.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.

இதன் போது கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் பயணிப்போரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகினர். இதில் பெரும்பாலனோர்கள் கொட்டும் கனமழையிலும் கலந்து கொண்டிருந்தனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம் நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று தமிழரசுக்கட்சியின் அராலித் தொகுதிக்கிளையில் இடம்பெற்றது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

இரத்ததான முகாம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

இராமநாதபுரம்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் தமிழரசுக்கட்சியின் இராமநாதபுரம் வட்டாரத்தின் ஏற்பாட்டில் பொதுச்சந்தை முன்பாகவும், ஆறுமுகம் வீதி சந்தியிலும் இடம்பெற்றது.

 குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டார்.

இதன்போது, அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் ஈழத்தமிழ் தேசிய இனம் இந்த மண்ணிலே நீண்டகாலம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டோம். 1954 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர் மீதான பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

நாட்டின் பல பகுதிகளில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது எல்லாம் தர்மத்தின் வழி நாங்கள் ஒரு தீர்வை எட்டிக்கொள்ளலாம் என எமது தலைவர்கள் கருதிய காலத்தில் எங்களைப் பாதுகாக்க ஆயுதங்களுக்கு பதில் வேறொன்றும் இல்லாத நிலையிலே ஆயுதங்களை ஏந்தினோம்.

அதனை விட கொத்தணி குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை நடந்து 16வருடம் ஆகியிருந்தாலும் சிரட்டையில் கஞ்சி என்பது உணவுக்காக மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் பெரிதும் உதவியது.

அந்த கஞ்சி குடித்த சிறுவர்களையே கொன்றது. இலங்கை அரசு சிரட்டை கஞ்சி என்பது எங்களோடு வாழ்ந்தவர்களின் ஆத்மாவாக நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி

தமிழரசு கட்சியின் பச்சிலைப்பள்ளி கிளை ஏற்பாட்டில் பளை பேருந்து தரிப்பிடத்தில் ஈழப் போராட்டத்தில் இறுதி நாட்களில் இனவழிப்பு செய்யப்பட்ட உறவுகள் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்ப்பட்டது.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

கிளிநொச்சி

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

இதேவேளை,  கிளிநொச்சி பூனகரி பிரதேசத்திற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இன்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதேச மக்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..! | Mullivaikkal Kanji Distribution In Tamil Areas

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US