முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் அஞ்சலி
முள்ளிவாய்கால் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), பண்டாரிக்குளத்தில்
முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலர் இணைந்து கஞ்சியை பண்டாரிக்குளம் பிரதான வீதியில் வைத்து இன்று (18.05.2024) வழங்கி வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறை
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்துள்ளனர்.

இதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வவுனியா குருமண் காடு காளி கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் விசேட ஆத்மசாந்தி பூசையும் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam