முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் அஞ்சலி
முள்ளிவாய்கால் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வவுனியா (Vavuniya), பண்டாரிக்குளத்தில்
முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பலர் இணைந்து கஞ்சியை பண்டாரிக்குளம் பிரதான வீதியில் வைத்து இன்று (18.05.2024) வழங்கி வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறை
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்துள்ளனர்.
இதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வவுனியா குருமண் காடு காளி கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் விசேட ஆத்மசாந்தி பூசையும் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
