வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி
வவுனியாவில் போரால் உயிரிழந்தவர்களுக்கு மூவின மக்களும் இணைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
வன்னி மக்கள் ஒன்றியம் மற்றும் போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்புக்களின் பெயரில் குறித்த நினைவு இன்று (18.05.2024) அஞ்சலி நிகழ்வு நகரசபை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
மதத் தலைவர்களின் ஆசி உரைகள்
கண்டிய நடனம், மேளதாள வாத்தியம் என்பவற்றுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரச சார்ப்பு கட்சி உறுப்பினர்கள் உட்பட்ட அதிதிகள் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மேடையில் அமரச் செய்யப்பட்டதுடன், மதத் தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்போது போரால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam