முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமைத்தில் இன்று (16.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் என்று சொல்கின்ற நீர்த்தார்சடங்கினை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிதிர்கடன் செய்ய அழைப்பு
உயிர்நீர்த்த உறவுகளின், உறவுகள் தங்களின் பிதிர்கடனை செய்து கொள்வதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி காலை 7.00 மணியில் இருந்து முள்ளிவாய்க்கால் கப்பல் வீதி கடற்கரையில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு பிதிர்கடன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் இங்கு பிதிர்கடன் செய்யமுடியும்.
இதன்போது தமிழ் மறைகள் ஓதப்பட்டு 15 தமிழ் அச்சகர்களால் பிதிர்கடன் செய்யப்படவுள்ளது.
இதுவரை பிதிர்கடன் செய்யாதவர்கள் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு பிதிர்கடன் செய்து உயிரிழந்த உறவுகளை திருப்திப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
