நினைவேந்தல் காலங்களில் விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல்: மகிந்த ராஜபக்ச
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் தடைவிதிக்கவில்லை.
நினைவேந்தல் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. தடைகளும் வருகின்றன.
உயிர் நீத்த உறவுகளின் நினைவேந்தல்
தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள்.
அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
