முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டது துயரத்தின் தொடர்ச்சி - வைரமுத்து
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் முல்லைத்தீவில் உடைக்கப்பட்டது துயரத்தின் தொடர்ச்சி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி நேற்று அதிகாலை சேதமாக்கப்பட்டிருந்தது.
அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவொன்றை இட்டு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம்
— வைரமுத்து (@Vairamuthu) May 14, 2021
முல்லைத்தீவில் உடைக்கப்பட்டது
துயரத்தின் தொடர்ச்சி.
இறந்தவர்களின்
நினைவுச் சின்னங்களும்,
இருப்பவர்களின் இதயங்களும்
ஒரே நேரத்தில் உடைக்கப்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.
சின்னங்களைச் சிதைக்காதீர்கள்;
உரிமைகளைப் பறிக்காதீர்கள்.#முள்ளிவாய்க்கால்
இறந்தவர்களின் நினைவுச் சின்னங்களும், இருப்பவர்களின் இதயங்களும் ஒரே நேரத்தில் உடைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சின்னங்களைச் சிதைக்காதீர்கள்; உரிமைகளைப் பறிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.