மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்
முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கிரியைகள்
மலேசியாவில் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன் அங்கு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நிலையில், அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மேம்பால வீதி ஒன்றில் இருந்து குதித்து கீழ் நின்ற காரின் மேல் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெற்றோர்கள், உறவினர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது உடுப்புக்குளத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் 11.11.2024 அன்று இடம்பெறும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam