மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்
முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கிரியைகள்
மலேசியாவில் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன் அங்கு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நிலையில், அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மேம்பால வீதி ஒன்றில் இருந்து குதித்து கீழ் நின்ற காரின் மேல் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெற்றோர்கள், உறவினர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது உடுப்புக்குளத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் 11.11.2024 அன்று இடம்பெறும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
